இரசனையில்
ஒத்துப் போகிறோம் என்னும்
பெருங்கர்வம் அவ்வப்போது
தலைதூக்குவது உண்டு ,
இன்றைய நிகழ்வு
அதையும் சுக்குநூறாய் சிதறவிட்டது.
இலக்கியம்
இசை சார்ந்த
உன் ரசனைகளை கற்று
தெரிந்து புரிந்து கொள்ளவே
இன்னும் சில ஆண்டுகள் கூடும்
இப்போதும்
நீ நிலாவாய்
எட்டாத உயரத்தில் .